நிலா

நான் குழந்தையாக இருக்கும்போது
ஏன் என் அம்மா உன்னைக்காட்டி
எனக்கு சோறு ஊட்டினாள்?

நீ முழுமையாக இருந்தால் பௌர்ணமி;
அதுவே,
நீ இல்லையேல் அது அமாவாசை
இது ஏன்?

நீ ஏன் சூரியனிடமிருந்து
ஒளியை வாங்க வேண்டும்;

நீ ஏன் பூமியை சுற்றி வர வேண்டும்!

கிரகணத்தின்போது உன்னை ஏன் பூமி வந்து மறைக்க வேண்டும்

இதற்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது

ஒன்றைத் தவிர!
அது உன்னை ரசிக்க.

எழுதியவர் : கலைச்செல்வன். ஏ (1-Oct-22, 3:34 pm)
சேர்த்தது : கலைச்செல்வன்
Tanglish : nila
பார்வை : 69

மேலே