தெய்வீக ராகங்களின் ஊர்வலம்

வசந்த வீணையை வாணியும் மீட்டிட
இசைந்தா டியது இளவேனில் தென்றல்
அசைந்தா டியது ஆலய மலர்கள்
திசையெல்லாம் தெய்வீக ராகங்களின்
...............................ஊர்வலம்

இயைந்த எதுகையுடன்
நாலுசீர் நாலடி
யாப்படையாளம் அறிவீர்கள்

வ வீ வா மோனை
இ இ மோனை
அ ஆ மோனை
தி தெ மோனை
எதுகையும் மோனையும் இலக்கியம்
பேசும் வாணியின் பாடல்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Oct-22, 3:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே