இயற்கைக்கு ஓர் யாப்பு 4 உழவன் இறைவன்

பாய்ந்துவரும் நீரோடையில்
...துள்ளிவரும் வெண்மீன்கள்
காய்ந்திடாது நெல்வயல்
....பேணிடும் உழவன்
ஓய்ந்திடா தொழிலாளி
....ஊருக்கு உழைப்பவன்
மாய்ந்திடாது மண்ணுயிர்
....காக்கும் இறைவன் !
இயற்கைக்கு ஓர் யாப்பு
உழவியல் விருத்தம்