நெல்லுக் கட்டு ஏத்திக்கிட்டு போகுறானே செல்லக்கண்ணு

என்னங்க கண்ணு
கொஞ்சோன்டு நில்லுங்க /
வடக்கால தோப்புக்க
என்னையும் இறக்கிக்குங்க/
மொடக்குவாத தாத்தாக்கிட்ட
நானும் போய்க்கணுங்க/

கண்ணு கிண்ணு
என்னாக்கா கொன்னுடுவேன் /
கம்முனு கும்முனு
வருவாயாக்கா ஏறிக்கோ/

ம்க்கும் கடகடவென
ஓடிக்கும் அடையாணி வண்டி /
கிடையிலே போட்டுக்கிட்டா
என்னாகுமோ வீராப்பு /

நெல்லுக் கட்டோடு
மல்லுக்கட்டும் அயித்தானே/
சொல்லாலே கிள்ளிப்புட்டாய்
என்னோட நெஞ்சத்தையே/
ஏத்திக்கிட்டு போறேன்னு
ஒத்துக்கிட்டா போதுமையா/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (14-Oct-22, 8:52 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 49

மேலே