அற்றது பற்றெனின் உற்றது வீடு – அறநெறிச்சாரம் 196
நேரிசை வெண்பா
அருளால் அறம்வளரும் ஆள்வினையால் ஆக்கம்
பொருளால் பொருள்வளரும் நாளும் - தெருளா
விழைவின்பத் தால்வளரும் காமமக் காம
விழைவின்மை யால்வளரும் வீடு 196
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
துன்பத்தால் வருந்தும் உயிர்கட்கு இரங்கி அருள்செய்வதால் அறமானது வளரும், முயற்சியால் பெருவாழ்வு உளதாம், எக்காலத்தும் செல்வத்தால் செல்வம் உண்டாம்,
மயக்கத்தைத் தரும் சிற்றின்பத்தால் ஆசை பெருகும், அச்சிற்றின்ப ஆசையைவிட வீடுபேறு உளதாம்.
குறிப்பு:
தெருள் - அறிவு. இதன் எதிர்மொழி மருள்; தெருளா விழைவு - புணர்ச்சி, இணை விழைச்சு;
விழைவு - விருப்பம்