அற்றது பற்றெனின் உற்றது வீடு – அறநெறிச்சாரம் 196

நேரிசை வெண்பா

அருளால் அறம்வளரும் ஆள்வினையால் ஆக்கம்
பொருளால் பொருள்வளரும் நாளும் - தெருளா
விழைவின்பத் தால்வளரும் காமமக் காம
விழைவின்மை யால்வளரும் வீடு 196

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

துன்பத்தால் வருந்தும் உயிர்கட்கு இரங்கி அருள்செய்வதால் அறமானது வளரும், முயற்சியால் பெருவாழ்வு உளதாம், எக்காலத்தும் செல்வத்தால் செல்வம் உண்டாம்,

மயக்கத்தைத் தரும் சிற்றின்பத்தால் ஆசை பெருகும், அச்சிற்றின்ப ஆசையைவிட வீடுபேறு உளதாம்.

குறிப்பு:

தெருள் - அறிவு. இதன் எதிர்மொழி மருள்; தெருளா விழைவு - புணர்ச்சி, இணை விழைச்சு;
விழைவு - விருப்பம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Nov-22, 9:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

மேலே