தனிமை
அறைக்குள் உடைபடும் கண்ணாடியாய்
கனவில் காணும் சுதந்திரமாய்
நீரோட்டத்தில் கலக்காமல்
தனித்து செல்லும் ஓடையாய்
பொய் தரிக்காமல்
மாயை உலகை ஒதுக்கி
தனிமை உடை உடுத்தி
உண்மை கொண்ட சிறு நட்பை
துணை கொண்டு
கரையும் காலத்தில்
கரைந்து போகிறேன்.
உலகின் தேவை ஒதுக்கி
மனதின் தேவை அறிகிறேன்.