ஆதி சிவனே

ஆதி சிவனே

யாம் கொண்ட இப்பிறப்பு
தாம் ஈன்ற பிச்சையென
தாமதமாய் யாம் உணர்ந்தோம்
ஆதி சிவனே

நீ வேறு
யாம் வேறு
குடி கொண்ட
பொருள் வேறு
என்றெண்ணி திரிந்த கூட்டம்

எம் வேரு(வேர்) நீ என்று
எம் மனம் உழும்
அருள் ஏரு(ஏர்) நீ என்று
மெய் கண்டு கொண்டபின்
கை கூப்பி வேண்டி நின்றோம்
ஆதி சிவனே

அரசனாய் ஆனாலும்
ஆண்டியென திரிந்தாலும்
ஆடவராய் பெண்டீராய்
இரண்டுமாய் இருந்தாலும்
அலைந்து திரிந்து முடித்து
கடைசி மூச்சடங்கி
கதி என்று சேருமிடம்
கண்டு கொண்டோம் நீயெனவே
ஆதி சிவனே

ஆடிடும் வாழ்வுதனில்
சேர்ந்திடும் பாவங்களை
கழுவி கரைசேர
சற்றே நீ தலை சாய்ந்தால்
வழிந்திடும் கங்கையில்
முழுவதும் மூழ்கியே நாங்கள்
மூர்ச்சையாகிட வழிதருவாய்
ஆதி சிவனே

கரு வழியே புவியிரங்கி
கண்ட பயன் போதுமென்றே

மண்ணோடு புதைந்தேனும்
கனலோடு கலந்தேனும்
உடலெனும் கூடுவிட்டு
உன்பாதம் சரணடைய
வரமருள்வாய்
அருள் புரிவாய்
ஆதி சிவனே

ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (6-Dec-22, 12:49 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : Aathai sivane
பார்வை : 31

மேலே