நினைவெல்லாம் நீயே
நினைவெல்லாம் நீயே
விழிகள் வழியே இதயத்துள் நுழைந்தவனே/
விழிகள் பார்க்க நாம் இணைந்தோம்/
ஆயிரம் ஆயிரம் ஊடல்கள் வந்தாலும்/
ஊடலுக்குப் பின் கூடலே இல்லறம்
தாய் தந்தை தோழன் என
பன்முகத் தன்மை கொண்ட என்னவனே
பொருளீட்டச் சென்றாலும் தனிமையை உணர்ந்தேன்
வரும் வழி பார்த்து ஏங்கினேன்
எப்பிறவியிலும் என்னவன் நீ மட்டுமே
எப்பொழுதும் என் நினைவெல்லாம் நீயே