தனதாக்கிக் கொள்ளும்

வனத்தில் சுற்றித்திரியும்
வண்டு ஒன்று
வண்ண வண்ண பூக்களின்
வாசத்திலும் அழகிலும்
மயங்கி
மலரின் மடியில்
வந்து அமர்ந்தது

பெண்மைக்கு இணையான
பூவோ நாணப்பட்டு
விரித்த இதழ்களை மூடி
மானம் காப்பதுபோல்
மறைத்துக் கொண்டது
மலருள் அகப்பட்ட வண்டு
மரணமுற்று, மலருக்கு
இறையானது போல்

பொன்னுக்கும், மண்ணுக்கும்
பேராசை கொண்டு
தவறிழைப்பவர்களை
முடிவில் மண்ணே
மனிதனை
தனதாக்கிக்கொள்ளும்

எழுதியவர் : (8-Dec-22, 1:26 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 46

மேலே