அழியாப் பேற்றினை யடைவோர் கருத வேண்டியன – அறநெறிச்சாரம் 209
நேரிசை வெண்பா
உட்கப் படுமெழுத்(து) ஓரிரண்(டு) ஆவதே
நட்கப் படுமெழுத்தும் அத்துணையே - ஒட்டி
இழுக்கா வெழுத்தொன் றிமிழ்கடல் தண்சேர்ப்ப!
விழுச்சார்வு வேண்டு பவர்க்கு 209
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
ஒலிக்கின்ற குளிர்ந்த கடல் துறையை யுடையவனே!
அழியா நிலையையடைய விரும்புவோரால் அஞ்சத் தகுவது இரண்டெழுத்துக்களால் ஆகிய வினையே;
விரும்பத்தகுவதும் அவ்விரண்டு எழுத்துக்களாலாகிய வீடே ஆகும்;
நட்பாகக் கொண்டு அதனின் வழுவாதிருக்கத் தகுவது ஓரெழுத்தாகிய ஆ (சிவஞானம்) ஆகும்.
குறிப்பு:
வேண்டுபவர்க்கு; வேற்றுமை மயக்கம்; வினை - நல்வினைகளும், தீவினைகளுமாம்;
வீடு – மோட்சம்; ஆ - சிவஞானம்.