விழித்தவுடன் கண்ணாடி பார்த்தல் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தாதுங் களிப்புஞ் சகலவ சீகரமும்
போத அறிவுமுண்டாம் பூதலத்துள் - நாதமுறும்
பண்ணாடிப் பார்க்கும் பனிமொழியே நீவிழிப்பிற்
கண்ணாடி பார்த்திதனைக் காண்
- பதார்த்த குண சிந்தாமணி
விழித்தவுடன் கண்ணாடி பார்த்தால் வீரிய விருத்தி, மகிழ்ச்சி, வசியம், ஞானம் இவை அதிகரிக்கும்