விழித்தவுடன் கண்ணாடி பார்த்தல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தாதுங் களிப்புஞ் சகலவ சீகரமும்
போத அறிவுமுண்டாம் பூதலத்துள் - நாதமுறும்
பண்ணாடிப் பார்க்கும் பனிமொழியே நீவிழிப்பிற்
கண்ணாடி பார்த்திதனைக் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

விழித்தவுடன் கண்ணாடி பார்த்தால் வீரிய விருத்தி, மகிழ்ச்சி, வசியம், ஞானம் இவை அதிகரிக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Dec-22, 7:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே