மாயவன் இறைவன்..
என்னவளுக்கு என் கையால் பூச்சூட எத்தனை காலங்கள் காத்திருந்தேன்..
வாடாமல்லியும் வாடா வயதும்தான் முதிர்ந்தது..
ஏக்கமும் தூக்கமும் இதை நினைத்து நகர்ந்தது..
காலம் கனியும் வரை காத்திருந்தேன்..
கடவுளே அந்த பூப்போன்ற நாளை எனக்கு புன்னகையுடன் கொடுத்தாய்..
நன்றி கூட நாவல் சொல்லாமல் என் மனதார சொல்கிறேன் மாயவனே இறைவா..