நிலவே நீ எனக்கு அன்னையாக வா
👩👩 "நிலவை நான் கண்டேன்
நீ ஓடோடி வருவாயா !
உன் மீது பாசம் வைத்தேன்
உன்னைக் கட்டி தழுவ நினைப்பேன் !
உனக்கு முத்தம் கொடுக்க ஆசை உண்டு
உன்னை எடுத்து நெற்றியில் பொட்டு வைப்பேன் !
உன்னை அன்னையாக நினைப்பேன்
எனக்கு அன்னைமடி வேண்டும் !
உன் மடிமீது என் தலை வைத்து உறங்குவேன்
என்னைத் தாலாட்ட வருவாயா !
உன்னைச் சிறு குழந்தையாக நினைப்பேன்
உன்னைத் தாலாட்ட அங்கு ஓடி வருகிறேன் !
என்னைத் தாலாட்ட நீ நாளை வருவாயா !"👩👩