எந்நாளும் என் தேவனே 💒
🙏👪 "வழியான என் தேவனே !
துணையாக வருவார் என்றும்
பெலனானவர் என் அரணானவர் !
என்றென்றும் எனை விட்டு விலகாதவர் !
அல்லேலூயா ! அல்லேலூயா !
அல்லேலூயா ! அல்லேலூயா !
பயம் எந்தன் வாழ்வில் இல்லை
நிழல் கூட எனை பிரியும் நேரமுண்டு !
நிலையான மலைகூட அசைவதுண்டு !
அசையாது அவர் கிருபை !
அழியாது அவர் மகிமை !
அல்லேலூயா ! அல்லேலூயா !
அல்லேலூயா ! அல்லேலூயா !
கருவில் நான் உருவாகிய நாள்
முதலாய் !
கருத்தாக எனை காத்த கர்த்தரிவர் !
இருள் என்னை சூழ்ந்த போதும்
ஒளியாகி துணையானவர் !
அல்லேலூயா ! அல்லேலூயா !
அல்லேலூயா ! அல்லேலூயா !
முள்ளான பாதையில் நான் செல்லும்
போதும்
கல்வாரி அனுபவம் தான் காணும்
போதும்
என் இயேசு உடன் இருப்பார் !
என் பாரம் அவர் சுமப்பார் !
அல்லேலூயா ! அல்லேலூயா !
அல்லேலூயா ! அல்லேலூயா ! "🙏👪