தாய்..!!
அடி பெண்ணே
உன் திமிரை கூட்டு
அச்சத்தை துரத்து
வெளிச்சம் உண்டாகும்
உன்னுள்..!!
உன்னை மிஞ்சு
இங்கு ஒருவரும் கிடையாது எதையும்
துணிந்து செய்..!!
அச்சமின்றி உலகம்
உன்னை போற்றும்..!!
ஆணவம் கொண்ட
ஆணும் உன்
வலியை தாங்க
அவதிப்படுவானடி..!!
அடி பெண்ணே
உன்னைப் போன்று
மரணத்தை எவனும்
கண்ணெதிரே கண்டதில்லை..!!
உன் பாதையை
வெறியாக்கி நீ நடக்கும்
பாதை நெருப்பா
பூவாய் என
நீ முடிவெடு..!!
காலம் பதில்
சொல்லுமடி கன்னியே
உன் திமிருக்கு பரிசை..!!
என்னை ஈன்ற
அவளின் வெற்றியை
என் வாயிலாக
காலம் சொல்கிறது..!!