சேல்விழி யாளே,நீ செப்பு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(1, 3 சீர்களில் மோனை)
மேன்மையாய்ப் பாடலொன்றை மேட்டிமைச் சொற்களைத்
தேன்போலத் தேர்ந்தெடுத்துத் தித்திப்பாய் – ஊன்றுகோல்
போல்பற்றி உள்மனம் போற்ற உவப்புடன்
சேல்விழி யாளே,நீ செப்பு!
- வ.க.கன்னியப்பன்
பொதுவாக வெண்பா எழுதப் போட்டி வைக்கும் பொழுது, ஈற்றடியைக் கொடுத்து வெண்பா எழுதச் சொல்வார்கள்.
அதுபோல், சேல்விழி யாளே,நீ செப்பு! என்ற ஈற்றடிக்கு மற்ற மூன்றடிகளிலும் 1, 3 சீர்களில் தகுந்த மோனை அமைத்து ஒரு வெண்பா பாடலாமே!