காதலின சுடரொளியே
காதலின் சுடரொளியே !
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
காதலின் சுடரொளியே
கண்மணியே என்னவளே!
மோதலிலே பிறந்தாலும்
மொத்தமாய்க் கிடைத்தாயே!
சாதலும் பிரிக்காதே
சண்டைகளும் முறிக்காதே !
போதாதக் காலமெலாம்
போய்விடுமே புகையெனவே!
வெண்பாலில் கலந்திட்ட
செந்தேனாய் இனிப்பவளே !
வெண்பாவில் ஒலிக்கின்ற
செப்பலிசைச் சொல்லழகி!
மண்பானைச் சோறேஎனை
மயக்கியத்திரு வாரூர்த்தேரே !
மண்ணுலகே வியக்குதடி
மனைவியென வந்தவளே!
நீயின்றி நானில்லை
நிலவின்றி ஒளியில்லை!
தாயின்றி மகனில்லை
தாரணியில் வாழ்வில்லை!
சேயாக எனையேற்ற
செங்கமலம் நீவாழ்க!
வாயாற வாழ்த்துகிறேன்
வசந்தமயில் வாழ்கவாழ்க!
-யாதுமறியான்.