நெடுஞ்சாலைப் பயணம்
நீயும், நானும்..
நெடுஞ்சாலைப் பயணம்!
நீயோ..
உரிமையுடன் என் பின்னால்..
நானோ..
உச்ச மகிழ்ச்சியுடன் உன்முன்னால்..
பக்கக்கண்ணாடியில்
பாயும் என்பார்வைகளுக்காய்,
உன் உதடுகள்
உதிர்க்கும் புன்முறுவல்..
சந்தோசச் சாளரங்களை
அகலத்திறந்து விடும்..
பின்னாலிருந்து
எனை ரசிக்கும்
உன் பாசம் கண்டு,
நெடுஞ்சாலைகள்
நீண்டிடாதா என்று
நெஞ்சம் ஏங்கிநிற்கும்!
காலமெல்லாம் பயணிப்போம்..
கைபிடித்து களிப்புறுவோம்!