செங்கொடி மறுபக்கம்..//
வானில் அழகாக
பறந்து கொண்டிருக்கும்..//
பார்த்தோர் மனதை
கட்டி இழுக்கும்..//
கொடியின் மறுபக்கம்
மிகக் கொடுமையே..//
முன்னின்று பெயர்
மட்டுமே நிலைத்தது..//
ரத்தம் சிந்திய
மக்கள் கோடி..//
உழைப்பின் அத்தியாயமாக
கிடைத்தது வெற்றி..//
சுதந்திரம் கிடைத்து
சுகந்தமாய் பறக்கிறது..//
வியர்வை சிந்தியவர்கள்
நிரந்தரமாக மண்ணில்..//
செங்கொடி காணாத
காயமோ இப்போது..//
இன்னும் இன்னும்
நினைவூட்டும் வரலாறு..//
உலகிற்கு உழைத்ததை
மறந்து விடுவோமா..//
செங்கொடியின் மறுபக்கம் ரத்தவெள்ளமாக இப்போதும்..//
ப. பரமகுரு பச்சையப்பன்