அவலோகிதத்தின் பயன்பாடு ஒரு சிலருக்கே தெரியும்
வெவ்வேறு வகையான விருத்தங்கள் - கலிவிருத்தம், அறுசீர், எழுசீர், எண்சீர் விருத்தங்கள் (ஒவ்வொன்றிலும் பல வகையான வாய்பாடுகளுடன்) இவையெல்லாவற்றிலும் சந்த விருத்தங்கள் என்றும் பலவகைகள் உண்டு; அவலோகிதம் வலைத்தளத்தில் சரியான உள்ளீடுகள் அனைத்திற்குமில்லை; ஓரளவு இலக்கணமும், வாய்பாடுகளும் அறிந்தால் மட்டுமே இதனால் பயனுண்டு,
இது ஒரு எழுத்தையும் ஒரு சீராக எடுத்துக் கொள்ளும். பாடல்களில் மூன்று அசைகளுக்கு மேல் வருவதில்லை. தொடர்ச்சியாக நான்கசைகள் உள்ள சொல்லையும் எடுத்துக் கொள்ளும்; எதுகை மட்டும் தெரியும்; அதிலுள்ள சூட்சுமங்களும், சீரொழுங்கும் தெரியாது. இதற்கு இது தகுந்த மோனைகளும் தெரியாது. எனவே, அவலோகிதம் பயன்படுத்தவும், சரி எது, தவறு எது என்பது ஒரு சிலருக்கே தெரியும். ஓரளவு நான் அறிவேன்.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(தேமா 6)
எந்த நேர்த்தி யின்றி எந்த வாய்பா டின்றிச்
சொந்த மாகச் சொல்லிச் சொத்தை யாகச் சொல்லி
விந்தை யாகச் சொல்லி வேடிக் கையுங் காட்டி
நொந்து போகச் செய்வார் நோவும் மிக்க செய்வார்!