வாழ்வு

வாழ்வு.

வருடங்கள் என்னை
கடந்து சென்றது.

சில என் வாழ்வின்
வசந்த காலம்
எனக்கு செல்வமும்
புகழும் தந்த காலம்

சில என் வாழ்வின்
மாரி காலம்,
மாற்றம் இல்லா காலம்.

மற்றவை எல்லாம்
என் வாழ்வின்
கோடை காலம்
எனது கனவுகளை
பொசுக்கிய காலம்.

" மனிதர்கள் வாழ்வில்
வெற்றி பெற
முயற்சி மட்டும் போதாது,
விதி என்று ஒன்று உண்டு
அது மனிதர்கள் கையில் இல்லை,
அது ஆண்டவன் கையில் உண்டு "
என்ற பாடத்தை எனக்கு புகட்டிச் சென்ற காலம்.

இதை புரிந்தவர்
வாழ்வில் நிம்மதி அடைகிறார்,
புரியாதவர் பரிகாரம்
தேடி அலைகிறார்
என்றும் சொல்லி
சென்ற காலம் அது.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (21-May-23, 12:09 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : vaazvu
பார்வை : 49

மேலே