ஊட்டியும்,காஷ்மீரும்
ஊட்சி : காஷ்மீர் உன் காட்டுல ஒரே குண்டு மழைதான் போல
காஷ்மீர் : குண்டு மழை பொழியுறதால என்னுடைய பசுமை அப்படியே இருக்கு...
பனிமழை பொழிந்து குளுமையான தட்பவெப்பநிலையில் சிலு சிலுனு இருப்பதால உன் பசுமையை சீரழித்து கட்டிடம் கட்டிட்டாங்க...
ஊட்டி : கட்டிடம் கட்டி அழிச்சாலும் திட்டமிட்டு வெள்ளத்தை வரவச்சு கட்டம் கட்டி அவங்களை கூண்டோடு அழித்துதான் பார்க்கிறேன் திருந்த மாட்டன்றேன் மனிதன்..
காஷ்மீர் : இத்தனை கொடுமையிலும் ரோஜாவாக பூத்து குலுங்கி சந்தோஷமாக இருக்கிறாயே...
ஊட்டி : ஏண்டி நீ ராஜாவாக இந்தியா தலையில் இருந்து தலைக்கனம் இல்லாம இருக்க வெரி கிரேட்..
காஷ்மீர் : சீனா ஒரு பக்கம் பாகிஸ்தான் ஒரு பக்கம் இந்தியா ஒரு பக்கம் பன்ற வால்தனத்துல தலைக்கனம் எங்க பன்றது..
ஊட்டி : ....!
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்