என் கவிதைக் கோயிலுக்கு
நான் கட்டி அமைத்த இந்த
எந்தன் எழில் கவிதை கோயிலுக்கு
எழுந்தருளாயோ என்னன்பே என்காதலியே
மலர் விழியே கொடி இடைப் பாவையே
உனக்கு நான் பல்லாண்டு பாடி
இசைத்திடவே உன்னில் கலந்திடவே
ஒன்றாய் வாழ்ந்திடவே வாழ்வுள்ளவரை