வறுமைக்கு விடிவுண்டு

வறுமைக்கு விடிவுண்டு
////////////////\\\

மழைகண்ட விதையும்
மலர்ந்தே தளிர்விடும்/
ஏழையென்ற நிலைமாற
ஏக்கங்களை உரமாக்கு/

மலர்தேடிச் சேகரிக்கும்
ஒருதுளி உருகொண்ட/
தேனீயும் கைப்பிடித்
தேனை சேமிப்பதாக/

திரைகடல் கடந்தும்
திரவியம் தேடிட/
திருப்பமும் வருமே
திருப்பதி தெய்வமாக/

அணைநீரும் வாய்க்கால்
வந்திடவே பயணாகும்/
சேர்த்தப் பணமும்
சேவையாலே பலனாகும்/

உழைத்திட ஊக்கம்கொள்
வெறுமைகள் நிறைவாகும்/
உதவிட மனம்கொள்
வறுமையும் முடிவாகும்/

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (21-Jul-23, 6:01 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 41

மேலே