வறுமைக்கு விடிவுண்டு
வறுமைக்கு விடிவுண்டு
////////////////\\\
மழைகண்ட விதையும்
மலர்ந்தே தளிர்விடும்/
ஏழையென்ற நிலைமாற
ஏக்கங்களை உரமாக்கு/
மலர்தேடிச் சேகரிக்கும்
ஒருதுளி உருகொண்ட/
தேனீயும் கைப்பிடித்
தேனை சேமிப்பதாக/
திரைகடல் கடந்தும்
திரவியம் தேடிட/
திருப்பமும் வருமே
திருப்பதி தெய்வமாக/
அணைநீரும் வாய்க்கால்
வந்திடவே பயணாகும்/
சேர்த்தப் பணமும்
சேவையாலே பலனாகும்/
உழைத்திட ஊக்கம்கொள்
வெறுமைகள் நிறைவாகும்/
உதவிட மனம்கொள்
வறுமையும் முடிவாகும்/
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்