சொன்னதை மீண்டு மீண்டுஞ் சொல்லற் றீது - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)

சொன்னதை மீண்டு மீண்டுஞ்
..சொதப்பியே சொல்லற் றீது;
இன்சபை தன்னிற் சொல்ல
..வினிதுற வமைதல் வேண்டும்!
இன்புறு வகையிற் சொன்னா
..லெளிதினிற் புரித லாகும்;
இன்சுவைப் பாட லொன்றே
..யினிமையைத் தருவ தாகும்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Sep-23, 1:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே