உன்னிடம் சொல்லிவிட ஆசைதான் 555
***உன்னிடம் சொல்லிவிட ஆசைதான் 555 ***
சொந்தமானவளே...
அத்தை மகள்
மாமன் மகளென...
ஊருக்குள் ஆயிரம்
சொந்தம் இருக்க...
பார்த்து பேசிய
நாட்களோ ஏராளம்...
எனக்குள்
ஏற்படாத உணர்வு...
புது சொந்தமாக வந்த
உன்னை கண்டதும் ஏற்பட்டது...
மீண்டும்
உன்னை கண்டேன்...
புது பெண்ணாக
என் அலுவலகத்தில்...
உன்னிடம் சொல்லிவிட
ஆயிரம் வார்த்தைகள் இருந்தும்...
நீ கேட்க விரும்பவில்லை
என்னிடம் ஒரு வார்த்தைகூட...
சொல்லாத நேசங்கள்
சொந்தமாகாது...
உன்னிடம் சொல்லிவிட
ஆசைதான் தயக்கமின்றி...
பணி இடத்தில் எதிர் எதிரே
நாம் அமர்ந்திருந்தாலும்...
எனக்கு தரிசனம்
உன் கண்கள்தான்...
தேநீர் நேரத்தில் தேவதை
உன்னை தேடுகிறேன்...
உணவு இடைவேளையில்
உன்னால் கரைகிறேன்...
சொந்தமாக வேண்டும்
நீ எனக்கும் என் உறவுகளுக்கும்...
நாளை
நம் வாரிசுக்கும்.....
***முதல்பூ.பெ.மணி.....***
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
