இராவணன் சூலம் மழு முதலியன எறிந்தாவது கும்பகருணனை எழுப்புக எனல் - கொச்சகக் கலிப்பா

தரவு கொச்சகக் கலிப்பா
(1, 3 சீர்களில் மோனை)

இடைபேரா இளையானை, இணைஆழி மணிநெடுந்தேர்
படைபேரா வரும்போதும், பதையாத உடம்பானை,
மடைபேராச் சூலத்தால், மழுவாள்கொண்(டு) எறிந்தானும்,
தொடைபேராத் துயிலானை துயிலெழுப்பிக் கொணர்கவென்றான்! 55

- கும்பகருணன் வதைப் படலம், யுத்த காண்டம், கம்பராமாயணம்

எழுதியவர் : கம்பர் (22-Nov-23, 8:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே