மெல்லிய மாலையொன்றில் நீகண்ணால் சொன்னதோ
மல்லிகையைத் தொட்டுவந்த மென்தென்றல் தொட்டதென்னை
சில்லென்று வோர்கவிதை சொல்லாமல் வந்தது
மெல்லிய மாலையொன்றில் நீகண்ணால் சொன்னதோ
நில்காற்றே சொல்லிச்செல் நீ
-----இன்னிசை வெண்பா
மல்லிகையைத் தொட்டுவந்த மென்தென்றல் தொட்டதென்னை
சில்லென்று வோர்கவிதை சொல்லாமல் வந்ததுள்ளே
மெல்லியபொன் மாலையொன்றில் நீகண்ணால் சொல்லியதோ
நில்காற்றே சொல்லிச்செல் நீஎனக்கு பின்நகர்வாய்
------காய் காய் காய் காய் கலிவிருத்தம்