தென்றலுன் தாலாட்டில்

தென்றலுன் தாலாட்டில் பூமொட் டணைத்துமே
இன்னும் மலராமல் இப்படி தூங்குதுபார்
தென்றலே தாலாட்டல் போதும்நில் ஓய்வெடு
பூவைப் பறித்துநான் சூடிட வேண்டுமே
பாவை மொழிந்தாள் சிரித்து

--- பல விகற்ப பஃறொடை வெண்பா

தென்றலுன் தாலாட்டில் பூமொட் டணைத்துமே
இன்னும் மலராமல் இப்படி தூங்குதுபார்
தென்றலே தாலாட்டல் போதும்நில் ஓய்வெடு
நன்பூ வினைப்பறித்து நான்சூட வேண்டுமே
என்சொல்லைக் கேட்டுநீ ஏகு

----இப்பொழுதுஒரு விகற்ப பஃறொடை வெண்பா
மூன்றாம் சீர் மோனை அழகினை இருவடிவிலும் காண்க

எழுதியவர் : கவின் சாரலன் (19-Dec-23, 8:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே