நின்கூந்தலின் நிழலில் நான்பாடல் பாடிடுவேன்

நின்கூந்த லின்நிழலில் நான்பாடல் பாடிடுவேன்
பொன்னந்திப் போதினிலே பூவிரியும் வேளையிலே
கண்மயங்கி நீயுமே கேட்டிடுவாய் காதலிலே
பெண்மயிலே தோளினில் சாய்

-----இருவிகற்ப இன்னிசை வெண்பா

நின்கூந்த லின்நிழலில் நான்பாடல் பாடிடுவேன்
பொன்னந்திப் போதினிலே பூவிரியும் வேளையிலே
சின்னவளே நீயுமே கேட்டிடுவாய் காதலிலே
மன்னவனின் தோளினில்சாய் வாய்

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

நின்கூந்த லின்நிழலில் நான்பாடல் பாடிடுவேன்
பொன்னந்திப் போதினிலே பூவிரிய-- புன்னகைச்
சின்னவளே நீயுமே கேட்டிடுவாய் காதலிலே
மன்னவனின் தோளினில்சாய் வாய்

----ஒருவிகற்ப நேரிசை வெண்பா

நின்கூந்தல் தன்நிழலில் நான்பாடல் பாடிடுவேன்
பொன்னந்திப் போதினிலே பூவிரியும் வேளையிலே
சின்னவளே நீவந்து கேட்டிடுவாய் காதலிலே
மன்னவனின் தோளினில்சாய் வாய்மகிழ்ந்து மாலையிது

----முற்றிலும் காய் மயமான கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Dec-23, 10:37 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே