கண்ணனின் பாடலைப் பாடாமல் மார்கழியோ
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணனின் பாடலைப் பாடாமல் மார்கழியோ
கண்ணனின் மார்பினில் சூடாபூ என்னபூவோ
கண்ணனுக்கு வெண்ணை தராமலோர் பூசனையோ
கண்ணனிலா ராதையோ சொல்
-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா மோனைப் பொலிவுடன்
கண்ணனின்இன் பாடலைப் பாடாமல் மார்கழியோ
கண்ணனின்மென் மார்பினில் சூடாபூ என்னபூவோ
கண்ணனுக்கு வெண்ணையைத் தந்திடாமல் பூசனையோ
கண்ணனிலா ராதையோ கன்னியிலா கண்ணனோசொல்
----கூவிளங்காய் கூவிளம் காய் காய் கலிவிருத்தம்
மோனைப் பொலிவுடன்
கண்ணனின்இன் இசையினைப் பாடாமல் மார்கழியோ
கண்ணனின்மெல் லியமார்பில் சூடாபூ என்னபூவோ
கண்ணனுக்கு சுவைவெண்ணை தராமலென்ன நிவேதனமோ
கண்ணனிலா இராதையோ கன்னியில்லா மலவனோசொல்
----கலித்தளை மிகுந்த தரவு கொச்சகக் கலிப்பா
பொழிப்பு மோனைப் பொலிவுடன்