கண்ணனின் பாடலைப் பாடாமல் மார்கழியோ

கண்ணனின் பாடலைப் பாடாமல் மார்கழியோ
கண்ணனின் மார்பினில் சூடாபூ என்னபூவோ
கண்ணனுக்கு வெண்ணை தராமலோர் பூசனையோ
கண்ணனிலா ராதையோ சொல்

-----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா மோனைப் பொலிவுடன்

கண்ணனின்இன் பாடலைப் பாடாமல் மார்கழியோ
கண்ணனின்மென் மார்பினில் சூடாபூ என்னபூவோ
கண்ணனுக்கு வெண்ணையைத் தந்திடாமல் பூசனையோ
கண்ணனிலா ராதையோ கன்னியிலா கண்ணனோசொல்

----கூவிளங்காய் கூவிளம் காய் காய் கலிவிருத்தம்
மோனைப் பொலிவுடன்

கண்ணனின்இன் இசையினைப் பாடாமல் மார்கழியோ
கண்ணனின்மெல் லியமார்பில் சூடாபூ என்னபூவோ
கண்ணனுக்கு சுவைவெண்ணை தராமலென்ன நிவேதனமோ
கண்ணனிலா இராதையோ கன்னியில்லா மலவனோசொல்

----கலித்தளை மிகுந்த தரவு கொச்சகக் கலிப்பா
பொழிப்பு மோனைப் பொலிவுடன்

எழுதியவர் : கவின் சாரலன் (29-Dec-23, 3:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே