நன்மதி வெண்பா - நூல் - பாடல் 16
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
தூரிற் கரும்பினிதாய்த் தோன்றிமேல் வன்மைமிக்க
சீரிலாக் கண்கடொறுந் தீயதாய்ப் - பாரில்
முடிவி லுவர்ப்புறல்போல் முற்றுங் கயவர்
தொடர்பென்று நன்மதியே சொல்! 16