குலோத்துங்க சோழன் கோவை - நூல் - ஏழாவது - இடந்தலைப்பாடு
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.
மூன்றாவது - வன்புறை.
அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;
அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;
அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;
அவை வருமாறு:
அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.
பெருநயப் புரைத்தல்.
தெய்வத்திறம் பேசல்.
பிரியே னென்றல்
பிரிந்து வருகென்றல்.
இடமணித் தென்றல்.
இவற்றுள் முன்னைய மூன்றும் ஐயந் தீத்தற்கும், பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்கும் உரியன.
3 - வன்புறை முற்றிற்று.
நான்காவது – தெளிவு.
ஐந்தாவது – பிரிவுழி மகிழ்ச்சி.
அஃதாவது – பிரிந்து போகுமிடத்துப் போகின்ற தலைவி தன்மையைக் கண்டு தலைவன் மகிழ்தல்;
இது – வகையினறிச் செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லலும், பாகனொடு சொல்லலும் ஆகிய இரண்டு விரிகளை யுடையது; அவை வருமாறு:-
செல்லுங் கிழத்தி செலவுகண்டு உளத்தொடு சொல்லல்.
பாகனொடு சொல்லல்.
5-பிரிவுழி மகிழ்ச்சி முற்றிற்று.
ஆறாவது - பிரிவுழிக் கலங்கல்.
ஏழாவது--இடந்தலைப்பாடு.
அஃதாவது- இயற்கைப்புணர்ச்சியிற் கலந்த தலைவன் மறுநாளவ்விடத்தில் வந்து தலைவியைக் கூடுதல்; அது: தெய்வந் தெளிதல் கூடல் விடுத்தலென மூவகைப்படும்; அம்மூன்றுந் தந்த தெய்வந்தருமெனச் சேறல் முதல் ஆயத்துய்த்தலீறாகிய ஐந்து விரிகளையுடையன; அவை வருமாறு:--
தந்ததெய்வந் தருமெனச்சேறல்.
(இ-ள்) முன் கூட்டியவிதி யின்னுமவ்விடத்திற் சென்றாற் கூட்டுமெனத் தலைவன் சேறல்.
கட்டளைக் கலித்துறை
இட்டாரெப் போது மிடுவா ரிடாரென்று மிட்டு(ண்)கிலார்
பட்டாங்கி லுள்ள படியிதன் றோபண் டிராவணனைக்
கட்டாண்மை தீர்த்த குலோத்துங்க சோழன்கல் யாணிமின்னைத்
தட்டாது முன்னந் தருந்தெய்வ மின்னந் தருநெ(ஞ்)சமே! 37