கேளு நிலாவே

கேளு நிலாவே
🌖🌖🌖🌖🌖🌖

பெளர்ணமி நிலவு
பகலில் வந்ததோ/
தரிசனமே தந்து
தலையசைத்தே அழைத்ததோ/

காமனின் வீட்டு
கதவு திறந்ததோ/
மாமனின் உள்ளம்
மச்சினியை ஏற்றதோ/

கல்லெறிபட்ட நீரலையாக
கனவுகள் பிறந்ததே/
புல்வெளிப் பனிபோல
புல்லரிப்பு மேனியிலே/

மின்னல் தீண்டும்
மேகமாக கரைந்தே/
பன்னீராக மாறும்
பூவாக சிதைந்தே/

சொட்டும் தேனாக
சொல்லிடுவேன் காதலை/
தட்டிக் கழிக்காதே
கேளு நிலாவே/

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (21-Apr-24, 12:14 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 33

புதிய படைப்புகள்

மேலே