குறுங்கவிதைகள்

நல்ல சுவைப்பொருள் நாடி அடைந்து
சுவைக்கும் நாவே நீதீ சொற்கள்
உமிழ்வதேனோ ?

நல்லிசைக் கேட்டு பேரின்பம் காணும்
காதுகளே வசைச்சொல் கேளாதிருக்க

குழலூதும் கண்ணன் சிலை இருக்க
கண்களே ' கண்களைத்' தேடி போவதேனோ ?

உழைத்து வாழ இரு கைகள்
கைகளைக் கூப்பி கண்ணன் கால்களைத்
தொழுதிட உய்வுண்டு வாழ்க்கைக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Jun-24, 1:34 pm)
பார்வை : 34

மேலே