குலோத்துங்க சோழன் கோவை - நூல் - எட்டாவது - பாங்கிற் கூட்டம் - பாடல் 55

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

தலைவ னுற்ற துரைத்தல்.

கற்றறி பாங்கன் கழறல்.

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.

பாங்கன் கிழவோற் பழித்தல்.

கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்.

(இ-ள்) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.

இதுவுமது.

பாங்கன் றன்மனத்தழுங்கல்.

இதுவுமது

பாங்கன் தலைவனோடழுங்கல்.

எவ்விடத் தெவ்வியற் றென்றல்.

அவனஃ திவ்விடத்திவ்வியற் றென்றல்.

பாங்கன் இறைவனைத் தேற்றல்.

(இ-ள்) இவ்வாறு நீ வருந்தாதொழிக; நீ சொன்ன குறியிடத்துச் சென்று தலைவியைக் கண்டு யான் வருகிறேனென்று தலைவனைப் பாங்கன் தேற்றல்.

கட்டளைக் கலித்துறை

கிளிபோய் மொழிகற்பக் கேகயம் போய்க்கிளர் சாய(ல்)கற்ப
வளிபோய் விழிகற்ப நிற்குமப் பாவை யழகுகண்டு
களிபோ தகமன் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பா
வொளிபோது நின்னிலை யான்காண் பளவு முளந்தெளியே! 55

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (4-Jul-24, 7:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 2

மேலே