பற பற

பிறந்துவிட்டேன் என்பதற்காக
பறந்துக்கொண்டிருக்கிறேன்
எல்லைக் கோட்டை நோக்கி
மாறி மாறி வரும்
கறுப்பு வெள்ளை காட்சிகளைக் கடந்து
ஒரு சிறகில் வெறுப்பையும்
இன்னொரு சிறகில் அன்பையும்
சுமந்துக்கொண்டு
பறந்துக்கொண்டிருக்கிறேன்
வசைபாடுகளை இசையாக்கிகொள்கிறேன்
சகதிகளை சந்தனமாக்கிக் கொள்கிறேன்
எனக்குப் பறப்பதாக நினைத்து
யாருக்காகவோ பறந்துக்கொண்டிருக்கிறேன்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-Sep-24, 8:42 pm)
பார்வை : 20

சிறந்த கவிதைகள்

மேலே