குலோத்துங்க சோழன் கோவை - நூல் - ஒன்பதாவது--பாங்கிமதி யுடன்பாடு - பாடல் 70

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

தலைவ னுற்ற துரைத்தல்.

கற்றறி பாங்கன் கழறல்.

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.

பாங்கன் கிழவோற் பழித்தல்.

கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்.

(இ-ள்) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.

இதுவுமது.

பாங்கன் றன்மனத்தழுங்கல்.

இதுவுமது

பாங்கன் தலைவனோடழுங்கல்.

எவ்விடத் தெவ்வியற் றென்றல்.

அவனஃ திவ்விடத்திவ்வியற் றென்றல்.

பாங்கன் இறைவனைத் தேற்றல்.

குறிவயிற் சேறல்.

இறைவியைக்காண்டல்.

இகழ்ந்ததற்கு இரங்கல்.

தலைவனை வியத்தல்.

தலைவியை வியத்தல்.

தலைவன்றனக்குத் தலைவி நிலை கூறல்.

தலைவன் சேறல்.

தலைவியைக் காண்டல்.

கலவியின் மகிழ்தல்.

புகழ்தல்.

பாங்கியொடு வருகெனப் பகர்தல்.

பாங்கிற்கூட்டல்.

ஒன்பதாவது - பாங்கிமதி யுடன்பாடு.

அஃதாவது--தலைவி வேறுபாட்டைப் புணர்ச்சியுண்மை யறிந்தாராய்ந்து தோழி தன்மதியை யுடன்படுத்தல்; அது: முன்னுறவுணர்தல், குறையுறவுணர்தல், இருவருமுளவழி யவன்வரவுணர்தலென மூன்றுவகைப்படும்;

அவற்றுள் - முன்னுறவுணர்தலாவது தலைவனைப் புணர்ந்து மீண்டுவந்து தன் முன்னுற்ற தலைவியின் வேறுபாட்டைப் பாங்கி கண்டு அதனானே கூட்ட முண்மையறிதல்;

அது: வகையின் வகையாய் ஐயமுற்றோர்தல், ஐயந்தீர்தல், பல்வேறு கவர்பொருட் சொல்லி நாடல் என மூன்றாம்;

அவற்றுள்- ஐயமுற்றோர்தல் பலவகைப்படும்; அவை வருமாறு:-

நாற்றங்கண்டு ஐயுறல்.

தோற்றங்கண்டு ஐயுறல்.

ஒழுக்கங்கண்டு ஐயுறல்.

(இ-ள்) தெய்வந் தொழாமை முதலிய கண்டு சந்தேகித்தல்.

கட்டளைக் கலித்துறை

ஒன்னாரை வெந்கண்ட வேலான் றனதடி யோரிரண்டாற்
கன்னாரி யாக்குங் குலோத்துங்க சோழன்கல் யாணிவெற்பிற்
பொன்னாண் கழுத்தில்வந் தேறுமுன் னேயிந்தப் பூவைதனக்
கிந்நா ணுறுப்பெங்கு மேறிய வாறென் னினிச்சொல்வதே! 70

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (14-Sep-24, 7:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே