வனமெல்லாம் செண்பக பூ 555

அன்பே...

வயல்வெளியில் நீ நடக்கையில்
நாற்றெல்லாம் தலை குனிந்தது....

பருத்தி காட்டில் நீ பாடி
செல்கையில் .....

பருத்தி பூக்களெல்லாம் பறந்து
வந்தது உன் பின்னால்....

கரும்பு தோட்டத்தில் நீ
கலை எடுக்கையில் ....

கட்டெறும்புகள் உன் பாதங்களை
கடித்தது .....

நீ செங்கரும்பு என்று....

உன்னை பார்த்த நாள்முதல்

நீ வாடாத மலர் என்று
நினைத்தேன்......

நீயோ என்னை வாடவைத்துவிட்டு

உறங்குகிறாய் ......

கல்லறையில்......

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Oct-11, 8:48 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 441

மேலே