துணை இல்லாத துணை

துணை தேடி ஏங்கும் பெருமூச்சே துணையாக
துணையைத் தேடித்தேடி
துவைத்த துணியாய் கந்தலாகி ஒருவழியாய்
துணையோடு துணையாய் நின்ற போதும்

துணையில்லாமல் போகும் போது
துணையிருந்தும் துணை இல்லாதது போல்
துணையில்லாத துணைவியாய் மீண்டும்
துக்கத்தின் துளிகளே துணையாய்...

துணையை விடவும் துணிவில்லாத
துணைவியாய் துவண்டு போய்
திண்டாடி தெருவில் நிற்காமல்
துணையோடு தானும் ஒரு தூணாய்...கல்லாய்...

எழுதியவர் : shruthi (20-Nov-11, 10:32 pm)
சேர்த்தது : shruthi
பார்வை : 298

மேலே