காதலின் உண்மை வரிகள்

காதலே,
வார்த்தைகளை படிக்க வைத்த என்னை, எழுத வைத்தாய்,
காதலே,
அவளை பார்த்த என்னை, பேச வைத்தாய்,
காதலே,
அன்பாய் இருந்த என்னை நேசிக்க வைத்தாய்,
காதலே,
அவளை நினைத்த என்னை கனவில் வரவைத்தாய்,
காதலே,
பார்க்காமல் இருந்த என்னை, தவிக்க வைத்தாய்,
காதலே,
நோக வைத்த என்னை, சாக வைத்தாய்,
காதலே,
மண்ணில் சாய்ந்த என்னை, மீண்டும் மணக்க வைக்கிறாயே, உந்தன் மலராய்,
உயிரை கூடவா விட்டு வைக்கவில்லை......

எழுதியவர் : davidjc (22-Nov-11, 10:31 pm)
பார்வை : 528

மேலே