குளிர்காற்று..


உன் ஈர குழலின்...

ஈரங்களை...உலர வைக்கும்..

உன் அழகு....

உன் மெல்லிய கைகளால்..

உன் குழலை மாறி மாறி தட்டிவிடும்...

ஓசையை...

என் இதயத்துடிப்பாய் உணர்கிறேனடி...

நான்...

கட்டியணைக்கும் வேளைகளில்...

உனது வெட்கம் வெளிப்படுவதை போல...

உன் குழலிருந்தும்..ஓடோடிப்போகும்...

ஈரத்துளிகள்...

என் மீது எதேட்சையாய்...

தெளிக்கும் வேளைகளில்...

சுட்டெரிக்கும் வெயிலினிலும் ... குளிராய் உணர்வதன் ...

மாயம்தான்...

காதலாகியதோ!

எழுதியவர் : காளிதாசன்... (26-Nov-11, 3:22 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 214

மேலே