நாங்கள் இளைஞர்கள்

விடியலின் விளிம்பில் விஷேசப் பூக்கள்
காலை நேரத்து கதிரவன் சாயல்கள்
நீந்த தொடங்கும் நீல அன்னங்கள்
உயிரின் உன்னதத்தை உணரும் பருவங்கள்
வாழ்க்கையில் நுழையும் வன்மை வசந்தகள்
விதியினை நீனையும் விபரீதம் அற்றவ்ர்கள்
மதியினை மதிக்கும் மந்திரம் அறிந்தவர்கள்
மொட்டிலும் மலர்ந்த ஈரிதழ் ரோஜாக்கள்
வாழ்கை ரகசியத்தை வார்க்க துடிப்பவர்கள்
நாங்கள் இளைஞர்கள்
காற்றை போல் வேகம் கொண்டவர்கள்
கடலலை போல் தாகம் கொண்டவர்கள்
இரும்பு போல் இதயம் கொண்டவர்கள்
கரும்பு போல் கனிவும் கொண்டவர்கள்
நாங்கள் இளைஞர்கள்
உதிரிப் பூக்களாக உருக்குலைந்து கிடப்பவர்கள் அல்ல
இணைந்து மாலையாகி இன்பத்தினை பெறுபவர்கள்
ஒற்றைத் தேனியாய் வெட்டியாய் வாழ்பவர்கள் அல்ல
தேனீக் கூட்டமாய் சேர்ந்தே வாழ்பவர்கள்
புழுவில்லா ரேஷனும், புழுதி இல்லா சாலைகளும்
ஊழலில்லா மந்திரியும், உறுதியான தலைவனும்
விருப்பட்ட படிப்பையும், படிப்புகேத்த வேலையும்
வாழ்வுகேற்ற செல்வமும் வசதிகேற்ற துணைவியும்
நாட்டின் மீது பற்றும் வீட்டின் மீது கனிவும்
தமிழன் மீது உயிரும், தாயின் மீது பரிவும்
வேண்டுபவர்கள்
நாங்கள் இளைஞர்கள்
விவேகானந்தரின் நினைவு சுவடுகள்!
சாக்ரடிசின் சரித்திர கனவுகள்
படுத்து கிடந்தால் பாரத நதிகள்
எழுந்து நின்றால் இமயமலைகள்......
நாங்கள் இளைஞர்கள்
நாங்கள் இளைஞர்கள்
நாங்கள் இளைஞர்கள்.......................................

எழுதியவர் : சிவந்த பெருமாள் (17-Jan-12, 12:16 pm)
சேர்த்தது : சிவந்த பெருமாள்
பார்வை : 342

மேலே