ஏக்கம்

அத்தை மகளாய் நீ
உறவுகளிலும் பிரியவில்லை நாம்
இருப்பினும் உனது பள்ளி விடுமுறையில்
என்னை விட்டு நீ அயலூர் சென்ற பொழுதுகளில்
உனது விடுமுறையை எண்ணி எண்ணி
நான் கண் கலங்கிய நாட்கள்
கண் முன்னே வந்து போகிறதடி....... !!

இன்று நீ தாயாகும் செய்தி
என் காதோரம் வந்து விழ
வான வீதியில் மிதக்கிறேன்...!

அன்று எனக்காய் ஆறுதல் தேடி....
என் மடி நனைத்து நீ அழுத காட்சிகள்....
எனை முத்தமிட்டு பிரிவை சொன்ன வார்த்தைகளெல்லாம்........
நெஞ்சில் நிழலாடுதடி.....!!

இன்று உன் மடி தேடி வரப்போகும் ஆண் பிள்ளையாய்....
முத்தமிட்டு ரசிக்கும் நீயே - என் அன்னையாய் ....
இந்த பிறவியிலேயே வாய்க்க
வரம் கேட்டு பெற்றவன் நானடி......!

எழுதியவர் : முஸ்தாக் அஹமட் (18-Jan-12, 2:15 am)
Tanglish : aekkam
பார்வை : 374

மேலே