ஏக்கமாய் ஓர் உணர்வு..

மீண்டும் மீண்டும் நினைக்கிறேன் ..
உன் பற்றிய ஞாபகங்களை
நீண்ட நாட்களுக்கு பிறகு..
இணையத்தில்..
நான் எதிர்பார்த்து..
எதிர்பாராமல் கிடைத்த உன் புகைப்படம்..
பார்த்தவுடன்..
நான் இது வரை அறியாத ஒரு உணர்வு..
சந்தொஷமல்ல..
துக்கமல்ல..
அழுகையல்ல..
ம்..

அட..
எவ்வளவு அழகாய்..
சிரித்து கொண்டிருக்கிறாய்??
சந்தோஷமாய் இ ருக்கிறாய்..
ஆச்சரியமாய் இருக்கிறது..!
உனக்கு என் பற்றிய நினைவுகளே
வருவதில்லையா..?
இல்லை
வரும்..
வராமல் இருக்காது..
நீ நிச்சயம் நினைப்பாய்…
அதெப்படி நினைக்காமல் இருப்பாய்..??
ஒரு நாளில்..ஒரு நாளிகயாவது நினைத்திருப்பாய்..
சமாதானம் செய்து கொள்கிறேன்..
என்னை நானே…
நான் தான் உன்னை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறேன்..
நீ?
அது சரி..
உன்னில் பிழையொன்றுமில்லை..
நீ என்னை காதலித்தாய்..
நான் அறிவேன்..
நான் உன்னை காதலித்தேன்..
நீ அறிய மாட்டாய்..
உன்னை பொறுத்தவரையில்..
நான் முடிந்து போன காதல்..
என்னை பொறுத்த வரையில்..
நீ..
தெரியவில்லை..
உன்னை காதலித்து கரம் பிடிப்பதற்கு
எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன??
‘நாம் ஆசைப்பட்டது அனைத்தும் கிடைக்காது’ என்பது..
உன் விடயத்தில்..
சரியாகத்தான் இருக்கிறது…
என்னுள் புதைந்து கிடக்கும்..
எண்ண அலைகளை அறிவாயா..
இந்த அலைகள் உன்னை நிட்சயம்
வந்து தாக்கும்..
ம்ம்..
மீண்டும் இன்னுமொரு சமாதானம்..

இனி நாம் பார்க்க போவதில்லை..
ம்ம்..
பிறகு ஏன்??
அர்த்தமிலா பல கேள்விகள்..
என்னை நானே கேட்டு கொண்டிருக்கிறேன்..
உன்னைப்பாரத்தவாறே..

விழிகள் கனக்கின்றது…
கண்ணீர் வழிகிறது..
இதயம் வலிக்கிறது..
உன் நினைவுகள்..
என்னுள் ஒரு..
பிரளயத்தையே ஏற்படுத்துகிறது..
இவை எதையுமே அறியாமல்..

நீ மட்டும்..

இன்னும்….
சிரித்து கொண்டே இருக்கிறாய்..

எழுதியவர் : Janani (29-Jan-12, 7:44 pm)
பார்வை : 407

மேலே