அழுத மனம்

விழுந்தவுடன்
விழித்துக்கொள்கிறேன் !!

உண்மை புரிந்தவுடன்
புண்பட்டுபோகிறேன்!!!

காலம் மருந்து போட்டதால்
காட்சிகள் மறந்து விட்டதால் - பின்

பண்பட்டும் போகிறேன் - இப்படி
பண்பாடி திரிகிறேன்!!!

உழுத நிலம் விதைக்க ஏற்றது
அழுத மனம் தான் இங்கு பிழைக்க கற்றது !!!

எழுதியவர் : (12-Feb-12, 7:33 pm)
பார்வை : 201

புதிய படைப்புகள்

மேலே