அழுத மனம்
விழுந்தவுடன்
விழித்துக்கொள்கிறேன் !!
உண்மை புரிந்தவுடன்
புண்பட்டுபோகிறேன்!!!
காலம் மருந்து போட்டதால்
காட்சிகள் மறந்து விட்டதால் - பின்
பண்பட்டும் போகிறேன் - இப்படி
பண்பாடி திரிகிறேன்!!!
உழுத நிலம் விதைக்க ஏற்றது
அழுத மனம் தான் இங்கு பிழைக்க கற்றது !!!