திருமணம் !

உனக்கு நான் எனக்கு நீ
இருவரும் கரம் பிடித்து

உறுதியாக இறுதிவரை
என்று உறுதிமொழி அளித்து

இனி நம் சுக துக்கங்களை
பகிரிந்து கொள்வோம் என்று

சொந்தங்கள் கூடி - இங்கே
வாழ்த்துக்கள் கூறி

உன் நிழல்தான் இனி
அவளுக்கு நிஜம் என்று

உறவாக உன்னுடன்
உன் கையை பிடித்து கொண்டு ...........

திருமணம் !

இரு மனங்களின் சங்கமம் !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (5-Mar-12, 9:48 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 435

மேலே