மாறாத நிலாமுகம்
நிலாமுகம் காட்டி ஆதவனே எனிலும்,
முகமுகவரி மறைத்து மாற்றிநிற்பினும்,
மணம்பரப்பும் மலர் மல்லிகையினை
மங்கையின் கூந்தலினுள் மறைப்பினும்,
அழுத்தப்படும் மனநிறைவின்
புன்னகை, உரைத்திடும் முகம் போல,
உத்தரவின்றி உள்நுழையும் உன்
உயிர்வாசனை உறுதிகூறும் நீதானென.