குழந்தை சுதந்திரம்....
எப்போதும் கவிதை பேசும்
உன் பின்னால் நான் ;
அலை பேசியை எடுத்துக்கொண்டு
அலைகிறேன்..!
உன்னை அழுத்தமாய் பதிவு செய்ய ;
அழகியலாய் புகைப்படம் எடுக்க ;
நிற்க வைத்து பதிவு செய்தேன்
........திரும்பிக்கொண்டாய் ;
மீண்டும் நிற்க வைத்தேன்,
பதிவு செய்தேன் ;
........ஒளிந்துகொண்டாய் ;
இப்படியாய் நீ முகம் சுளித்தாய் ;
விரல் கடித்தாய் ;
விழுந்து விழுந்து எழுந்தாய்..!!!
அத்தனையும் பதிவு செய்தேன் அழகியலாக..! சளைக்கவில்லை மனம் ;
மனம் பொறுக்கவும் இல்லை..!?!
இறுதியாய் என் ஆசையை
உன்னுள் திணித்து மிரட்டலால்
உன்னை பணியவும் வைத்து..!!!
அதில் சிரிக்கவும் வைத்து
எடுத்த புகைப்படத்தில்
அத்தனை ஓர் செயற்கைத்தனம்..!!!
இப்போது என் இதயத்தின் சப்தமெல்லாம்
"குழந்தையை குழந்தையாய் விடுங்கள்"
வேறென்ன சொல்ல ?!!!