கே ஜி சாமி
தன்னோடு தானிருந்து
தளைத் தெழுந்த
கேள்விகள் பல நூறு ; ( கே ஜி சாமி )
விண்ணோடு தானிருந்து
விலகி நின்று
விடை அளித்ததாரூ? ( வேதாத்திரி )
முன்னவரின் கருவோடு;
பின்னவரின் கரு சேர;
முன்னவரும் விண்ணவரே!
இனி என்றும் அவருக்கு
வினை இல்லை! இறைவா !
உன் வீடு உண்டு;
தடை இன்றி வீற்றிருக்க
தயை செய்வாய் !